Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை அடுத்த அம்பத்தூரில் ஐப்பசி மாதம் ஆறாம் நாள் முருகப்பெருமான் ஆலயத்தில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
தமிழகம் முழுவது உள்ள அறுபடைவீடுகளில் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாகநடைபெறுவது வழக்கம் இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் முருகன் கோவில் பழனி முருகன் கோவிலிலும் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
வழக்கம் இதன் தொடர்ச்சியாக இன்று அம்பத்துர் பஜார் பகுதியில் அமைந்துள்ள சுப்ரமணியன் சாமி
முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடை பெற்ற தூ இதில் முருகன் அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார். தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூரபத்மனையும் முருகன் சக்தி வேலுடன் வதம் செய்தார். இதில் சூரபத்மன் மாண்டு விட்டதுபோல் நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கணேஷ் குருக்கள் அம்மா கண்ணன் மாரியப்பன் ஆறுமுகம் கதிர்வேல் ஆர்த்தி ஸ்வீட்ஸ் சுப்பிரமணி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். சூரர்களை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்ற நிலையில் அஏகன சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது ஐதீகம்.